sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

'சங்க இலக்கியத்தை மக்கள் மீள் வாசிப்பு செய்ய வேண்டும்'

/

'சங்க இலக்கியத்தை மக்கள் மீள் வாசிப்பு செய்ய வேண்டும்'

'சங்க இலக்கியத்தை மக்கள் மீள் வாசிப்பு செய்ய வேண்டும்'

'சங்க இலக்கியத்தை மக்கள் மீள் வாசிப்பு செய்ய வேண்டும்'


ADDED : ஆக 08, 2024 06:47 AM

Google News

ADDED : ஆக 08, 2024 06:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு, சி.என்.கல்லுாரி வளாகத்தில் மக்கள் சிந்தனை பேரவை சார்பில் நடந்து வரும் ஈரோடு புத்தக திருவிழாவில், நேற்று மாலை நேர அரங்கில் தலைவர் ஸ்டாலின் குணசேகரன் வர-வேற்றார்.

'அணிலாடு முன்றில்' என்ற தலைப்பில் சிந்துவெளி ஆய்வாளர் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணன் பேசியதா-வது: வாழ்க்கை குறித்து மட்டுமே பேசும் செவ்வியல் இலக்-கியம், சங்க இலக்கியம் மட்டுமே. எழுத்துக்கும், சொல்லுக்கும், புணர்ச்சிக்கு இலக்கணம் இருக்கும். ஆனால், பொருளதிகாரம் என்ற பெயரில் வாழ்க்கைக்கு இலக்கணம் எழுதப்பட்ட நுால், சங்க இலக்கியமாகும்.

நம்மில் பெரும்பாலும் சங்க இலக்கியத்தை சரியாக வாசிக்க-வில்லை. என் வாழ்நாள் கனவாக, சங்க இலக்கியத்தை மக்கள் மீள் வாசிப்பு செய்ய வேண்டும் என்பதாகும். இது நிகழ்கா-லத்தை புரிந்து கொள்வதற்காகவும், வருங்காலத்தை காக்கவும் அவசியமாகும். இவ்வாறு பேசினார்.

'அணையா விளக்கு' என்ற தலைப்பில் புதுக்கோட்டை ஞானா-லயா பா.கிருஷ்ணமூர்த்தி பேசுகையில்,''ஆழமான வாசிப்பும், அதுபற்றிய சிந்தனையும், தேடலும் அறிவை விசாலமாக்கும். மனதை பண்படுத்தும். மனிதர்களை மனிதாபிமானம் கொண்ட-வர்களாக மாற்றும். புத்தகங்கள் படிப்பதால் அறிவு புரட்சி ஏற்ப-டுகிறது. உ.வே.சாமிநாத அய்யர், 12 நாளில் திருக்குறளை ஆங்கி-லத்தில் மொழி பெயர்த்தார். இதற்கு முன், வேறு மொழி பெயர்ப்பு வந்திருந்தாலும், இதன் சிறப்பு, 80 பக்க முன்னுரை-யாகும், என்றார்.






      Dinamalar
      Follow us