sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கம்யூ., கட்சிகள் சார்பில் மறியல்

/

கம்யூ., கட்சிகள் சார்பில் மறியல்

கம்யூ., கட்சிகள் சார்பில் மறியல்

கம்யூ., கட்சிகள் சார்பில் மறியல்


ADDED : ஆக 02, 2024 02:03 AM

Google News

ADDED : ஆக 02, 2024 02:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம், மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து, இ.கம்யூ., மற்றும் மா.கம்யூ., கட்சிகள் சார்பில், காங்கேயம் பஸ் ஸ்டாண்டில் நேற்று காலை மறியல் போராட்டம் நடந்தது. மா.கம்யூ., காங்கேயம் தாலுகா குழு செயலாளர் திருவேங்கடசாமி தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் பழனிசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் மணிகண்டன் முன்னிலை வகித்தனர்.

சமீபத்தில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், தமிழகத்தை வஞ்சிக்கும் வகையில் முற்றிலுமாக புறக்கணித்தது, பொருளாதாரத்தில் பின் தங்கிய ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் மீது தாக்குதல், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அனைத்திலும் சலுகை வழங்கப்பட்டுள்ளது என பல்வேறு புகார்களை தெரிவித்து, 40 பேர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பஸ் ஸ்டாண்டில் இருந்து கோவை சாலையில் உள்ள தலைமை தபால் நிலையம் முன் ஆர்ப்பாட்டத்தை தொடர கிளம்பியபோது, பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா அருகில், அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us