/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பாசனத்துக்கு நீர் திறப்பு குறைப்பு
/
பாசனத்துக்கு நீர் திறப்பு குறைப்பு
ADDED : ஆக 05, 2024 02:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புன்செய் புளியம்பட்டி, பவானிசாகர் அணையில் இருந்து, அரக்கன் கோட்டை-தடப்பள்ளி மற்றும் காளிங்கராயன் பாசனத்திற்கு கடந்த ஜூலை, 12ம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
1,250 கன அடி வரை தண்ணீர் பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்ட நிலையில், தற்போது நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி அரக்கன் கோட்டை-தடப்பள்ளி பாசனத்திற்கு, 800 கன அடி நீர்; காளிங்கராயன் பாசனத்திற்கு,150 கன அடி தண்ணீர் என, 950 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நேற்று நீர்வரத்து, 2,994 கன அடியாக இருந்தது. அணை நீர்மட்டம், 94.83 அடி; நீர் இருப்பு, 24.8 டி.எம்.சி.,யாக இருந்தது.