ADDED : ஆக 20, 2024 02:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம்: கடம்பூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான பசுவனாபுரம், பவளகுட்டை, அத்தியூர், கானக்குந்துார் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை, 6:30 மணிக்கு தொடங்கிய மழை, இடைவெளி விட்டு பரவலாக, 8:00 மணி வரை கொட்டி
தீர்த்தது.
இதேபோல் சத்தி மற்றும் சுற்று வட்டார பகுதிகளான கே.என்.பாளையம்,
தாசரிபாளையம், கொமாரபாளையம், சதுமுகை, சிக்கரசம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மாலை, 4:30 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. இடைவெளி விட்டு சாரலாக வெகுநேரம் பெய்தது. இதனால் இதமான சூழல்
நிலவியது.
* தாளவாடி மற்றும் திகினாரை, கரளவாடி, சிக்கள்ளி, மல்லன்குழி, கல்மண்டிபுரம், கெட்டவாடி, ஜீரகள்ளி உள்ளிட்ட மலை கிராமங்களில் நேற்று மாலை, 4:30 மணிக்கு தொடங்கிய கனமழை, ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கொட்டியது.

