/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வன பூஜையை முன்னிட்டு குருநாதசுவாமி கோவில் தேர் வனத்தை நோக்கி சென்றது
/
வன பூஜையை முன்னிட்டு குருநாதசுவாமி கோவில் தேர் வனத்தை நோக்கி சென்றது
வன பூஜையை முன்னிட்டு குருநாதசுவாமி கோவில் தேர் வனத்தை நோக்கி சென்றது
வன பூஜையை முன்னிட்டு குருநாதசுவாமி கோவில் தேர் வனத்தை நோக்கி சென்றது
ADDED : ஆக 02, 2024 02:05 AM
அந்தியூர், அந்தியூர், குருநாதசுவாமி கோவில் முதல் வன பூஜையை முன்னிட்டு, காமாட்சியம்மன் சிறிய சப்பரத்திலும், பெருமாள், குருநாத சுவாமி சிறிய தேர்களிலும், பக்தர்கள் தோளில் சுமந்த படி வனக்கோவிலை நோக்கி சென்றனர். அந்தியூர், புதுப்பாளையத்தில் பிரசித்திபெற்ற குருநாதசுவாமி கோவில் உள்ளது. இங்கு ஆடி மாதத்தில் வெகு விமர்சையாக பண்டிகை நடப்பது வழக்கம். அந்த வகையில் கடந்த, 17ல், பூச்சாட்டுதலுடன் பண்டியை துவங்கி, 24ல், வனக்கோவிலில் கொடியேற்றுதல், நேற்று முதல் வன பூஜை நடந்தது. இதில், புதுப்பாளையத்தில் உள்ள குருநாதசுவாமி கோவிலில் இருந்து, சிறிய சப்பரத்தில், காமட்சியம்மனும், சிறிய தேர்களில் பெருமாளும், குருநாதசுவாமியையும், பக்தர்கள் தோளில் சுமந்த படி, வனக்கோவிலுக்கு சென்றனர். அங்கே சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. இந்நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இன்று அதிகாலை, மீண்டும் இந்த தெய்வங்கள் வனக்கோவிலில் இருந்து சிறிய சப்பரம், தேர்களில் பக்தர்கள் தோளில் சுமந்தபடி, புதுப்பாளையம் குருநாதசுவாமி கோவிலை வந்தடைவர். முன்னதாக தேர் செல்லும் முன், பக்தர்கள் தரையில் படுத்து சுவாமியை வழிபட்டனர்.