sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கனி மார்க்கெட் வணிக வளாக நுழைவு வாயிலை அடைத்த வியாபாரிகள்

/

கனி மார்க்கெட் வணிக வளாக நுழைவு வாயிலை அடைத்த வியாபாரிகள்

கனி மார்க்கெட் வணிக வளாக நுழைவு வாயிலை அடைத்த வியாபாரிகள்

கனி மார்க்கெட் வணிக வளாக நுழைவு வாயிலை அடைத்த வியாபாரிகள்


ADDED : ஆக 23, 2024 01:18 AM

Google News

ADDED : ஆக 23, 2024 01:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஆக. 23-

ஈரோடு ப.செ.பார்க் அருகில், மாநகராட்சிக்கு சொந்தமான கனி மார்க்கெட் வணிக வளாகம் செயல்படுகிறது. வணிக வளாகத்தின் தரைத்தளத்தில் வாகனங்களை நிறுத்த, தனியாருக்கு ஏலம் விடப்பட்டுள்ளது.

வணிக வளாகத்தில் கடை வைத்துள்ள ஜவுளி வியாபாரிகளின் வாகனங்களுக்கும் கட்டணம் வசூலிப்பதை கண்டித்து, வணிக வளாகத்தின் நுழைவுவாயிலை, வியாபாரிகள் நேற்று மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து ஜவுளி வியாபாரிகள் சங்க தலைவர் நுார்சேட் கூறியதாவது:

வணிக வளாகத்தில் முன்னுரிமை அடிப்படையில் கடை பெற்ற, 107 வியாபாரிகளுக்கு மட்டும் ஒரு வாகனத்தை கட்டணமின்றி நிறுத்தி கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், மீதி வியாபாரிகள் வாகனத்தை நிறுத்துவதற்கு, 4 மணி நேரத்திற்கு, 20 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒரு கடையில் 2 அல்லது 3 வேலையாட்கள் பணி செய்கின்றனர். அவர்களது வாகனங்கள் நிறுத்தவும் கட்டணம் வசூலிக்கின்றனர். வாடிக்கையாளர் வாகனம் நிறுத்த, 20 ரூபாய் கட்டணம் வசூலிப்பதால், வணிக வளாகத்திற்குள் மக்கள் வரவே தயங்கி வருகின்றனர். இதனால் எங்களுக்கு வியாபாரமும் பெரிதாக இல்லை.

எனவே, ஜவுளி வணிக வளாக வியாபாரிகள், ஊழியர்களின் வாகனங்களை நிறுத்த தனி இடம் ஒதுக்கி தர வேண்டும். மக்களிடம் வாகனம் நிறுத்த வசூலிக்கும் தொகையை ஒரு மணி நேரத்திற்கு, 5 ரூபாய் என நிர்ணயித்து வசூலிக்க வேண்டும். இது தொடர்பாக அமைச்சர் முத்துசாமியிடம் முறையிட உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகாரி-வியாபாரிகள் வாக்குவாதம்

கனி மார்க்கெட் வணிக வளாக நுழைவுவாயில் மூடப்பட்ட தகவலறிந்து சென்ற மாநகராட்சி ஊழியர்கள், நுழைவு வாயிலை திறந்து விட்டனர். தொடர்ந்து வியாபாரிகளிடம் 'வணிக வளாகத்தின் கதவை அடைக்க உங்களுக்கு அதிகாரம் இல்லை.

உங்களது பிரச்னைக்கு உங்கள் கதவை அடைத்து கொள்ளலாமே தவிர, மாநகராட்சி நுழைவு வாயிலை பூட்டக்கூடாது' என எச்சரித்தனர். இதை எதிர்த்து வியாபாரிகள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us