ADDED : ஜூன் 17, 2026 06:09 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:த.வெ.க.,
தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி, சிறு, குறு விவசாயிகளுக்கு,
100 சதவீதமும், பெரிய விவசாயிகளுக்கு, 50 சதவீதமும் வேளாண்
கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.
அவ்வாறு இல்லாமல்,
விதிமுறைகள், குறைவான தொகை மட்டுமே வழங்கப்படும் என்பதை வாபஸ்
பெற்று, முழு கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும். விளை பொருட்களுக்கு
விலை இல்லை. விவசாயத்துக்கு ஆட்கள் வேலைக்கு வருவதில்லை என்பதை அரசு
உணர்ந்து அனைத்து வேளாண் கடனையும் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி,
ஈரோடு, திண்டல் மலை தொடக்க வேளாண் நகர கூட்டுறவு வங்கி முன், வங்கி
உறுப்பினர்கள், விவசாயிகள் சார்பில் உறுப்பினர் மணிமாறன் தலைமையில்
விவசாயிகள் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
