/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பண்ணாரியம்மன் கோவில் உண்டியலில் ரூ.௧ கோடி
/
பண்ணாரியம்மன் கோவில் உண்டியலில் ரூ.௧ கோடி
ADDED : ஜூன் 25, 2024 02:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தை அடுத்த பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவிலில், உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது.
கோவில் துணைஆணையர் மேனகா தலைமையில் வங்கி பணியாளர், திருக்கோவில் ஊழியர், தன்னார்வலர்கள், காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். ஒரு கோடியே, நான்கு லட்சத்து, 81 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம், 465 கிராம் தங்கம், 1,006 கிராம் வெள்ளி நகை, காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்ததாக, கோவில் அலுவலர்கள் தெரிவித்தனர்.