/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வெள்ளக்கோவிலில் 108 சங்காபிஷேக விழா
/
வெள்ளக்கோவிலில் 108 சங்காபிஷேக விழா
ADDED : செப் 08, 2024 07:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்: வெள்ளகோவில் புற்றுக்கண் ஆனந்த விநாயகர் கோவிலில், ஏழாவது ஆண்டு கும்பாபிஷேக விழா, விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, 108 சங்காபிஷேகம் நேற்று நடந்தது. முன்னதாக எல்.கே.சி., நகர் மக்கள் கொடுமுடி காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் எடுத்து வந்து வந்தனர்,
நேற்று காலை விநாயகருக்கு தீர்த்த அபிஷேகம், விசேஷ ஹோமத்தை தொடர்ந்து, 108 சங்காபிஷேகம் நடந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை எல்.கே.சி., நகர் மக்கள் செய்திருந்தனர்.