sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வேன் மீது கார் மோதியதில் 3 கல்லுாரி மாணவர்கள் பலி

/

வேன் மீது கார் மோதியதில் 3 கல்லுாரி மாணவர்கள் பலி

வேன் மீது கார் மோதியதில் 3 கல்லுாரி மாணவர்கள் பலி

வேன் மீது கார் மோதியதில் 3 கல்லுாரி மாணவர்கள் பலி


ADDED : ஜூலை 28, 2024 02:54 AM

Google News

ADDED : ஜூலை 28, 2024 02:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்தியமங்கலம்:ஈரோடு, கருங்கல்பாளையத்தை சேர்ந்தவர் முகில் நிவாஸ், 22; கால்பந்து வீரர். இவரது நண்பர்கள் ரோகித், 18, ஸ்ரீனிவாஸ், 17. மூவரும் சத்தியமங்கலம் தனியார் பொறியியல் கல்லுாரி முதலாமாண்டு மாணவர்கள். மாணிக்கம்பாளையத்தை சேர்ந்தவர்கள் சீனிவாசன், 22, தர்மேஷ், 19.

இவர்கள் ஐந்து பேரும் ஈரோடிலிருந்து ஆசனுாருக்கு, 'ஹூண்டாய் வெர்னா' காரில் நேற்று முன்தினம் இரவு சென்றனர். முகில் நிவாஸ் காரை ஓட்டினார்.

சத்தியமங்கலம் அருகே வடவள்ளி முருகன் கோவில் மேடு பகுதியில், எதிரே தக்காளி லோடு ஏற்றி வந்த, 'பிக்அப்' வேன் மீது, கண்ணிமைக்கும் நேரத்தில் கார் மோதியது. இதில், முகில் நிவாஸ் சம்பவ இடத்திலேயே பலியானார்.

தர்மேஷ், ரோகித் மருத்துவமனை செல்லும் வழியில் இறந்தனர். ஸ்ரீனிவாஸ், சீனிவாசன் மற்றும் வேன் டிரைவரான, சேலம் மாவட்டம் கண்ணாமூச்சியைச் சேர்ந்த சிவகுமார் படுகாயமடைந்தனர். மூவரும் தனியார், அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். சத்தி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us