/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சென்னிமலையில் 52 மி.மீ., மழை ஏரிக்கு நீர்வரத்தால் மக்கள் மகிழ்ச்சி
/
சென்னிமலையில் 52 மி.மீ., மழை ஏரிக்கு நீர்வரத்தால் மக்கள் மகிழ்ச்சி
சென்னிமலையில் 52 மி.மீ., மழை ஏரிக்கு நீர்வரத்தால் மக்கள் மகிழ்ச்சி
சென்னிமலையில் 52 மி.மீ., மழை ஏரிக்கு நீர்வரத்தால் மக்கள் மகிழ்ச்சி
ADDED : ஆக 13, 2024 07:43 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் சில தினங்களாக லேசான மழை பரவலாக பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக சென்னிமலையில், ௫௨ மி.மீ., மழை பெய்தது. பிற இடங்களில் பெய்த மழை விபரம் (மி.மீ.,ல்): ஈரோடு--38, மொடக்குறிச்சி-18, பெருந்துறை-10, பவானி-4.20, கவுந்தப்பாடி-12.40, அம்மாபேட்டை-26, வரட்டுப்பள்ளம் அணை-19.40, கோபி 9.20, எலந்தகுட்டை மேடு-17.60, கொடிவேரி அணை-8.20, குண்டேரிபள்ளம் அணை, நம்பியூர் தலா-12, சத்தி-3, பவானிசாகர் அணை-1.80.
பலத்த மழையால் சென்னிமலை யூனியன் எக்கட்டாம்பாளையம் ஊராட்சி, அய்யம்பாளையம், ஆண்டிகாட்டு குளத்துக்கு நேற்று தண்ணீர் வந்தது. மழை நீரை குடிநீராதாரமாக நம்பி வாழும் இப்பகுதி மக்கள் இதனால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.