sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தாயை பிரிந்து தனியே தவிக்கும் குட்டி யானை

/

தாயை பிரிந்து தனியே தவிக்கும் குட்டி யானை

தாயை பிரிந்து தனியே தவிக்கும் குட்டி யானை

தாயை பிரிந்து தனியே தவிக்கும் குட்டி யானை


ADDED : ஜூன் 12, 2024 10:53 PM

Google News

ADDED : ஜூன் 12, 2024 10:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்தியமங்கலம் : ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பண்ணாரி செல்லும் வழியில், புதுக்குய்யனுார் அருகில் கடந்த ஏப்., 11ல், 40 வயது மதிக்கத்தக்க பெண் யானை, உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு படுத்து கிடந்தது. வனத்துறையினர் யானைக்கு சிகிச்சையளித்தனர். யானை அருகில், 3 வயது குட்டி யானை தவித்து கொண்டிருந்தது. மறுநாள், பெண் யானை சிகிச்சை பலனின்றி இறந்தது.

அந்த குட்டி யானையை, மற்ற யானைகளோடு சேர்த்து விட்டனர். ஆனால், அந்த குட்டி யானையை மற்ற யானைகள் சேர்க்காமல் துரத்தின. குட்டி யானை தொடர்ந்து, கடந்த இரு மாதமாக பண்ணாரி சாலையில் மாலை நேரத்தில் சாலையை கடந்து, அங்கும் இங்கும் உலவி கொண்டிருந்தது.

இதை பார்த்த வனத்துறையினர், பட்டாசு வெடித்து விரட்டி வந்தனர். தாய் யானையை பிரிந்து, உணவு கிடைக்காமல் மிகவும் தளர்ந்த நிலையில், குட்டி யானை உலா வருவது, மிகவும் பரிதாபமாக உள்ளது.

எனவே, குட்டி யானையை வனத்துறையினர் மீட்டு, முதுமலை யானை முகாமிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us