ADDED : ஜூலை 14, 2024 02:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு, சாஸ்திரி நகர், கல்யாண சுந்தரம் வீதியை சேர்ந்த சுரேஷ் குமார் மகன் யஸ்வந்த் குமார், 7; இரண்டாம் வகுப்பு மாணவன். கடந்த, 11ம் தேதி மாலை சாஸ்திரி நகர் சடையம்பாளையம் சாலை மார்க்கெட் அருகே சாலையோரம் நின்று கொண்டி-ருந்தான்.
அப்போது அதிவேகமாக வந்த கார் மோதியதில் சிறுவனுக்கு கனுக்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. ஈரோட்டில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். காரை ஓட்டி வந்த ஈரோடு, மூலப்பாளையம், பாரதி நகரை சேர்ந்த சக்திவேல் மீது இரு பிரி-வுகளில், சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.