/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பணியில் மயங்கி விழுந்த கட்டட மேஸ்திரி சாவு
/
பணியில் மயங்கி விழுந்த கட்டட மேஸ்திரி சாவு
ADDED : ஜூலை 12, 2024 01:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம் தாராபுரத்தை அடுத்த ஆர்.கே.நகரை சேர்ந்தவர் மேகநாதன், 68, கட்டட மேஸ்திரி. காங்கயம்பாளையம் அருகே ஒரு தோட்டத்தில், நேற்று மாலை வேலையாட்களை மேற்பார்வை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார். சக தொழிலாளர்கள் மீட்டு, தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் சோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது. அலங்கியம் போலீசார்
விசாரிக்கின்றனர்.