ADDED : ஜூன் 23, 2024 02:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:ஈரோடு, மரப்பாலம், நடராஜா தியேட்டர் ஹவுசிங் யூனிட்டில் ஒரு வீட்டில், சீட்டாட்டம் நடப்பதாக, டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் அங்கு விரைந்தனர். மரப்பாலத்தை சேர்ந்த கூலி தொழிலாளி ஆனந்த், 39, மாநகராட்சி துப்புரவு பணியாளர் ஐயப்பன், 43; ஈரோடு, பெரியார் வீதி பாஸ்கரன், 29, ஆனந்த், 24; ஈரோடு, கள்ளுக்கடை மேடு ரவீந்தர், 38; ஈரோடு, முனிசிபல் சத்திரம், மாநகராட்சி குப்பை அரைக்கும் தொழிலாளி மாணிக்கம், 38; மரப்பாலத்தை சேர்ந்த பெயிண்டர் ஹபிபுல்லா, 26, சீட்டாடியது தெரியவந்தது. ஏழு பேரையும் கைது செய்த போலீசார், சொந்த ஜாமினில் விடுவித்தனர்.