/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்தவர் கைது
/
நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்தவர் கைது
ADDED : ஜூன் 24, 2024 03:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம்;கடம்பூர் அருகே நகலுார் கிராமத்தில், ஒருவர் நாட்டுத்துப்பாக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
கடம்பூர் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இதில் மணி, 39, என்பவர் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக நாட்டுத்துப்பாக்கியை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. அவரை கைது செய்து, நாட்டுத்துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.