sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தி.மு.க., கவுன்சிலர் வீட்டில் திருட முயன்ற வாலிபருக்கு தர்ம அடி

/

தி.மு.க., கவுன்சிலர் வீட்டில் திருட முயன்ற வாலிபருக்கு தர்ம அடி

தி.மு.க., கவுன்சிலர் வீட்டில் திருட முயன்ற வாலிபருக்கு தர்ம அடி

தி.மு.க., கவுன்சிலர் வீட்டில் திருட முயன்ற வாலிபருக்கு தர்ம அடி


ADDED : ஜூலை 18, 2024 01:57 AM

Google News

ADDED : ஜூலை 18, 2024 01:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாநகராட்சி, தி.மு.க. கவுன்சிலர் வீட்டில் திருட முயன்ற வாலிபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

ஈரோடு பெரிய சேமூர் ஈ.பி.பி. நகர், பி.பி. கார்டனை சேர்ந்தவர் ஜெகதீசன், 50. ஈரோடு மாநகராட்சி, 12வது வார்டு, தி.மு.க. கவுன்சிலர். நேற்று முன் தினம் இரவு ஈரோடு மாணிக்கம் பாளையம் சாலை பாலாஜி பேக்கரி பின்புறம் வசிக்கும் மூத்த மகள் கனிமொழியை வீட்டுக்கு சென்று பார்த்து விட்டு இரவு, 11:45 மணிக்கு வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டின் முதல் மாடியில் ஆள் நடமாட்டம் இருப்பது தெரியவந்தது.

தகவல் அறிந்து அப்பகுதி மக்கள் ஒன்று கூறி வீட்டில் திருட வந்த வாலிபரை பிடித்தனர். அவருக்கு தர்ம அடி கொடுத்-தனர். பின்னர் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசில் ஒப்படைத்-தனர். விசாரணையில் செங்கல்பட்டு, குன்னவாக்கம், அம்பேத்கர் முதல் தெரு, வள்ளி கண்ணன் மகன் மோகன் குமார், 33, என தெரியவந்தது. மோகன் குமாரை வீரப்பன்சத்திரம் போலீசார், ஸ்டேஷனுக்கு விசாரணைக்கு அழைத்து சென்றனர்.






      Dinamalar
      Follow us