sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அந்தியூர் குருநாதசுவாமி கோவிலில் ஆடி தேர்த்திருவிழா கொண்டாட்டம்

/

அந்தியூர் குருநாதசுவாமி கோவிலில் ஆடி தேர்த்திருவிழா கொண்டாட்டம்

அந்தியூர் குருநாதசுவாமி கோவிலில் ஆடி தேர்த்திருவிழா கொண்டாட்டம்

அந்தியூர் குருநாதசுவாமி கோவிலில் ஆடி தேர்த்திருவிழா கொண்டாட்டம்


ADDED : ஆக 07, 2024 10:56 PM

Google News

ADDED : ஆக 07, 2024 10:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அந்தியூர்:தேர்த்திருவிழாவை முன்னிட்டு, ஈரோடு மாவட்டம், அந்தியூர் புதுப்பாளையத்தில் இருந்து வனக்கோவிலை நோக்கி காமாட்சியம்மன் சிறிய சப்பரத்திலும், அதை தொடர்ந்து பெருமாள் சுவாமி, குருநாத சுவாமிகள், 60 அடி மகமேரு தேரில், மக்கள் வெள்ளத்தில் எழுந்தருளினர்.

தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற, ஈரோடு மாவட்டம், அந்தியூர், புதுப்பாளையத்தில் உள்ள குருநாதசுவாமி கோவில் பண்டிகை, ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் வெகு விமர்சையாக நடப்பது வழக்கம்.

அந்த வகையில், நடப்பாண்டு பூச்சாட்டுதல் விழா கடந்த மாதம், 17ல், துவங்கியது. 24ல், கொடியேற்றுதல் நிகழ்ச்சியும், 31 முதல் வன பூஜையும் நடந்து வந்தது.

முக்கிய நிகழ்வான நேற்று காலை, 10:30 மணிக்கு புதுப்பாளையத்தில் உள்ள குருநாதசுவாமி கோவிலில் இருந்து, காமாட்சியம்மன் சிறிய சப்பர தேரிலும், பெருமாள், குருநாதசுவாமி, 60 அடி மகமேரு தேரிலும் என, மூன்று தேர்களையும் பக்தர்கள் தோளில் சுமந்தபடி, வனக்கோவிலுக்கு கொண்டு வந்தனர்.

வழிநெடுகிலும் சாலையின் இருபுறங்களில், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். வரும், 14ல், பால் பூஜையுடன் பண்டிகை நிறைவடைகிறது. தேர்த்திருவிழாவை காண, ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி, வெளி மாவட்டம், கர்நாடகா மாநிலங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.

ஆடிப்பெருந்தேர் திருவிழாவை தொடர்ந்து, கால்நடை சந்தை, பறவை கண்காட்சி, பொழுது போக்கு அம்சங்களுடன் பண்டிகை தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு வெகு விமர்சையாக நடப்பது வழக்கம்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை பலத்த மழை பெய்தது. இதனால், பண்டிகை துவங்கிய நேற்று, கால்நடை சந்தை வளாகம் முழுவதும் சேறும், சகதியுமாக மாறியது. இதனால் பொதுமக்கள், கால்நடை சந்தை நடைபெறும் பகுதிகளுக்கு சென்று வர சிரமப்பட்டனர். மக்களின் வருகை மிகவும் குறைவாக இருந்தது.

அந்தியூரில் நடைபெறும் குதிரை சந்தை மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குதிரைகளை விற்பனைக்கு கொண்டு வருவர். நேற்று முன்தினமும், நேற்றும் மழை பெய்ததால் குதிரை வியாபாரம் 'டல்' அடித்தது. சிறிய குதிரை, 30,000 முதல், 2 லட்சம் ரூபாய் வரையும், பெரிய குதிரைகள் 80,000 முதல், 40 லட்சம் ரூபாய் வரையும் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று மதியம், 2:30 மணிக்கு மீண்டும் துவங்கிய கன மழை அரை மணி நேரம் நீடித்தது. இதனால் இந்த பகுதி இன்னும் சகதிக்காடாக மாறியது. இதனால் கால்நடை சந்தை நடக்கும் பகுதியில் மக்கள் நடமாட்டம் குறைந்தது.

மேலும் ராட்டின துாரிகள், பறவை கண்காட்சியை காண மக்கள் ஆர்வம் காட்டவில்லை. மழையால் கால்நடை சந்தை வியாபாரம் பாதித்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us