/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சரணாலயத்துக்கு கீழ்பவானி நீர வரத்தில் பாதிப்பு பொறியாளர்களிடம் பேசி தீர்வு காண நடவடிக்கை
/
சரணாலயத்துக்கு கீழ்பவானி நீர வரத்தில் பாதிப்பு பொறியாளர்களிடம் பேசி தீர்வு காண நடவடிக்கை
சரணாலயத்துக்கு கீழ்பவானி நீர வரத்தில் பாதிப்பு பொறியாளர்களிடம் பேசி தீர்வு காண நடவடிக்கை
சரணாலயத்துக்கு கீழ்பவானி நீர வரத்தில் பாதிப்பு பொறியாளர்களிடம் பேசி தீர்வு காண நடவடிக்கை
ADDED : ஆக 08, 2024 12:44 AM
ஈரோடு:வெள்ளோடு பறவைகள் சரணாலயத்துக்கு, கீழ்பவானி வாய்க்கால் கசிவு நீர் வரும் பகுதியில் கான்கிரீட் தளம், சுவர் அமைப்பால் பாதிப்பு ஏற்படாமல் கவனம் கொள்ள, நீர் வளத்துறை பொறியாளர்களிடம் வனத்துறையினர் பேசி வருகின்றனர்.
இது குறித்து, ஈரோடு மாவட்ட வன அலுவலர் குமிளி அப்பாலே நாயுடு கூறியதாவது:
ஈரோடு மாவட்டம், வெள்ளோடு பறவைகள் சரணாலயத்துக்கு அதிகமாக பறவைகள் வருகின்றன. சரணாலயத்துக்கு சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈர நிலங்கள் என 'ராம்சர் குறியீடு' பெறப்பட்டுள்ளது.
சரணாலயத்தில், சில ஆண்டுகளுக்கு செயல்படுத்த வேண்டிய திட்டப்பணிகள் குறித்து தயார் செய்து வருகிறோம். இங்குள்ள குளத்துக்கு, கீழ்பவானி வாய்க்காலின் கசிவு நீரே முக்கியம்.
வாய்க்காலின் சீரமைப்பு பணியில் கான்கிரீட் தளம், சுவர் அமைப்பால் குளத்துக்கு வரும் நீர் பாதிக்காத வகையில் அமைக்கும்படி, நீர் வளத்துறை பொறியாளர்களிடம் பேசி உள்ளோம். பறவைகள் வரத்திலும், நீர் வருவதிலும் பிரச்னை இல்லாத வகையில் நடவடிக்கை மேற்கொள்வோம்.
ஈரோடு மாவட்டம், நம்பியூர் அருகே உள்ள எலத்துார் குளத்துக்கும் அதிக பறவைகள் வருகை புரிவதால், அதனையும் பறவைகள் சரணாலயமாக அறிவிக்க பரிந்துரை அனுப்பி உள்ளோம்.
அந்தியூர், பர்கூர் வனப்பகுதியில் பெரியார் வனவிலங்குகள் சரணாலயம் அறிவிக்கப்பட்டு உள்ளதால், அங்கு ஏற்கனவே உள்ள சாலைகளை சீரமைப்பது, பராமரிப்பது போன்றவை தொடரும். புதிய சாலைகள் அமைப்பது பற்றி வனத்துறை பரிந்துரைக்கும். மத்திய அரசின் அனுமதி பெற்று செயல்படுத்தப்படும்.
இந்த வனப்பகுதியில், 11 ரிசார்ட்கள் உள்ளன. அவை, வனத்துறையின் விதிகளுக்கு உட்பட்டு செயல்படும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் அனுமதி பெற வேண்டும். அதற்காக விண்ணப்பித்துள்ளனர். அனுமதி பெறாத, சொந்த பயன்பாட்டுக்கு என உள்ள ரிசார்ட், அதுபோன்ற அமைப்பில் உள்ளவை குறித்து விசாரித்து வருகிறோம்.
வன விலங்குகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், 10 ஆண்டுகளில் விலங்குகள் மற்றும் வனத்தில் வளத்தை அதிகரிப்பதற்கு தேவையான திட்டங்கள் தயாரித்து அரசுக்கு அனுப்பி உள்ளோம்.
அத்துடன் வனத்தில் உள்ள உனிச்செடி, கருவேல மரங்கள் போன்றவற்றை அகற்றிவிட்டு, அதற்கு பதில் வேம்பு, புங்கன், மூங்கில், அத்தி, நீர் வேம்பு போன்ற மரங்களை வளர்த்து வருகிறோம். தனியார் நிலங்களிலும் இவற்றை வளர்க்க, ெஹக்டேருக்கு, 100 கன்றுகள் வழங்குகிறோம்.
இவ்வாறு கூறினார்.