/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கொடுமுடி பேரூராட்சி கூட்டம் ஒத்திவைப்பு
/
கொடுமுடி பேரூராட்சி கூட்டம் ஒத்திவைப்பு
ADDED : ஆக 30, 2024 04:05 AM
கொடுமுடி: கொடுமுடி பேரூராட்சி அலுவலக சாதாரண கூட்டம் நேற்று நடந்-தது. இதில், 40க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் மன்றத்தின் பார்-வைக்கு வைக்கப்பட்டன. கூட்டம் தொடங்கியவுடன் தளுவம்பா-ளையம் அருகில் தனியார் ஒருவரின் மனைப்பிரிவுக்கு ஒப்புதல் வழங்க சில கவுன்சிலர்கள்
வலியுறுத்தினர்.
அதேசமயம் மனைப்பிரிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தளுவம்பா-ளையம் மற்றும் வெள்ளியனைக்காட்டூர் மக்கள், கலெக்டர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலரிடம் மனு கொடுத்துள்-ளனர். இது தொடர்பாக இரு தரப்பினரிடமும் ஆலோசித்து முடிவு மேற்கொள்ளலாம் என தலைவர் தெரிவித்தார்.இதனால் ஒப்புதல் கேட்ட கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்-தனர். மன்ற கூட்டம் மறு தேதி அறிவிக்கப்படாமல் ஒத்தி வைக்-கப்பட்டது.

