ADDED : ஏப் 09, 2024 01:51 AM
சத்தியமங்கலம்;கடம்பூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட குரும்பூர் மலை கிராமத்தில், குரும்பூரில் சாலையை ஒட்டியுள்ள விவசாய நிலத்தில், ௨௫ வயதான பெண் யானை, நேற்று காலை மயங்கிய நிலையில் கிடந்தது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் கடம்பூர் வனத்துறையினருக்கு தகவல் தந்தனர்.வன கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையிலான மருத்துவ குழுவினருடன் வனத்துறையினர் சென்றனர். யானைக்கு குளுக்கோஸ் ஏற்றி, தண்ணீர் கொடுத்து முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
கடும் வெயிலால் யானைக்கு பந்தல் அமைத்து பாதுகாப்பு செய்யப்பட்டது. யானைக்கு வேறெந்த காயமும் இல்லை. ஓய்வுக்கு பிறகு யானையை பாதுகாப்பாக காட்டுக்குள் அனுப்பி வைப்போம் என்று, வனத்துறையினர் தெரிவித்தனர்.மொசல்மடுவு வனப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி வந்து களைப்படைந்த யானை, தண்ணீர் கிடைக்காத நிலையில், பள்ளத்தில் விழுந்திருக்கலாம் என, வனத்துறையினர் தெரிவித்தனர்.

