/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஒற்றை யானை தாக்கியதில் வேட்டை தடுப்பு காவலர் பலி
/
ஒற்றை யானை தாக்கியதில் வேட்டை தடுப்பு காவலர் பலி
ADDED : ஆக 10, 2024 02:31 AM

புன்செய் புளியம்பட்டி:ஈரோடு மாவட்டம், விளாமுண்டி வனச்சரகத்தில் தங்கராஜ், 49, என்பவர் வேட்டை தடுப்பு காவலராக பணிபுரிந்தார்.
பழங்குடியினத்தை சேர்ந்த இவர், நேற்று காலை, சிங்கமலை வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, வனப்பகுதியில் இருந்த ஒற்றை யானை, அவரை திடீரென துரத்தியது.
தப்பி ஓடியவரை, யானை துரத்தி பிடித்து தும்பிக்கையால் தாக்கி, காலால் மிதித்ததில் பலத்த காயம் ஏற்பட்டது.
அவர் கூச்சலிட்டதால், வனத்துறை ஊழியர்கள் யானையை விரட்டினர். படுகாயமடைந்த அவரை மீட்டு, சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே அவர் இறந்தார். அவருக்கு லட்சுமி என்ற மனைவியும், மகளும் உள்ளனர்.
விளாமுண்டி வனத்துறை அதிகாரிகள் மற்றும் பவானிசாகர் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

