sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மாநகராட்சி வார்டுகளில் பகுதி சபை கூட்டம்

/

மாநகராட்சி வார்டுகளில் பகுதி சபை கூட்டம்

மாநகராட்சி வார்டுகளில் பகுதி சபை கூட்டம்

மாநகராட்சி வார்டுகளில் பகுதி சபை கூட்டம்


ADDED : ஜூன் 30, 2024 03:54 AM

Google News

ADDED : ஜூன் 30, 2024 03:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாநகராட்சியில் ஒவ்வொரு மாதமும் மாமன்ற கூட்டம் நடத்தப்படுகிறது. அதேபோல், ஒவ்வொரு வார்டிலும் மக்களின் குறைகளை அறிய, பகுதி சபை கூட்டம் நடத்த கோரிக்கை எழுந்தது.

இதன்படி நான்கு மண்டலங்களிலும் மாதந்தோறும் ஒரு வார்டு தேர்வு செய்து, பகுதி சபை கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. இதன்படி இரண்டாவது மண்டலத்துக்கு உட்பட்ட, 35வது வார்டில் கவுன்சிலர் புவனேஸ்வரி பாலசுந்தரம் தலைமையில், பகுதி சபை கூட்டம் நேற்று நடந்தது. மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், இரண்டாம் மண்டல தலைவர் சுப்பிரமணியம் பங்கேற்றனர்.

இதில் சொத்து வரி, குடிநீர் வரி, வரி பெயர் மாற்றம், தொழில் வரி, பாதாள சாக்கடை இணைப்பு, கட்டிட அனுமதி, சாலை வசதி, தெரு விளக்கு, சாக்கடை வசதி தொடர்பாக பொதுமக்கள் அளித்த மனுக்களை பெற்று, உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

இதேபோல் முதலாவது மண்டலத்துக்கு உட்பட்ட ஆறாவது வார்டில், கவுன்சிலர் தமிழ்பிரியன் தலைமையில் பகுதி சபை கூட்டம் நடந்தது. முதலாம் மண்டல தலைவர் பழனிசாமி, உதவி ஆணையர் அண்ணாதுரை முன்னிலை வகித்து, மக்களிடம் மனுக்களை பெற்றனர். மூன்றாவது மண்டலத்தில், 50வது வார்டில் கவுன்சிலரும், மேயருமான நாகரத்தினம் தலைமையிலும், நான்காம் மண்டலம், 55வது வார்டில், கவுன்சிலர் சுபலட்சுமி தலைமையிலும் பகுதி சபை கூட்டம் நடந்தது.






      Dinamalar
      Follow us