/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'ஏர்-கன்'னால் சுட்ட ஆசாமிக்கு சிறை
/
'ஏர்-கன்'னால் சுட்ட ஆசாமிக்கு சிறை
ADDED : செப் 03, 2024 03:49 AM
பவானி: ஈரோடு, வீரப்பன்சத்திரம், கம்பர் வீதியை சேர்ந்தவர்கள் செந்தில்குமார், 47; கார்த்தி, 35; இருவரும், அம்மாபேட்டை பழைய மாரியம்மன் கோவில் வீதியில், தனித்தனியே தங்கி, ஒரே மேஸ்திரியிடம் கட்டட வேலைக்கு சென்று வருகின்றனர். சில மாதங்களுக்கு முன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், கார்த்தி வேலைக்கு செல்லாமல் இருந்தார்.
நேற்று முன்தினம் இரவு செந்தில்குமார் தனது வீட்டின் முன் அமர்ந்து, அதே பகுதியை சேர்ந்த ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது குடிபோதையில் வந்த கார்த்தி, 'நான் சொல்லும் மேஸ்திரியிடம் வேலைக்கு வர மாட்டாயா?' என்று தகாத வார்த்தை பேசியதுடன், 'ஏர்-கன்' துப்பாக்கியால் செந்தில்குமாரை சுட்டார். இதில் தொடையில் பலத்த காயமடைந்தார். அவர் புகாரின்படி கார்த்தியை கைது செய்த அம்மாபேட்டை போலீசார், பவானி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 'ஏர்-கன்'னை பறிமுதல் செய்தனர்.