sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஆடிட்டர் வீட்டு திருட்டில் முக்கிய குற்றவாளியை கஸ்டடி எடுக்க தீவிரம்

/

ஆடிட்டர் வீட்டு திருட்டில் முக்கிய குற்றவாளியை கஸ்டடி எடுக்க தீவிரம்

ஆடிட்டர் வீட்டு திருட்டில் முக்கிய குற்றவாளியை கஸ்டடி எடுக்க தீவிரம்

ஆடிட்டர் வீட்டு திருட்டில் முக்கிய குற்றவாளியை கஸ்டடி எடுக்க தீவிரம்


ADDED : ஆக 08, 2024 01:39 AM

Google News

ADDED : ஆக 08, 2024 01:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோட்டில், ஆடிட்டர் வீட்டு திருட்டில் முக்கிய குற்றவாளியை கஸ்டடி எடுத்து விசாரணை நடத்த போலீசார் சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

ஈரோடு, சூரம்பட்டி என்.ஜி.ஜி.ஓ. காலனி 7வது வீதியை சேர்ந்தவர் சுப்பிரமணி, 69, ஆடிட்டர். இவர் மனைவி சாதனா. இருவரும் கடந்த ஜூன், 8 காலை வீட்டை பூட்டி விட்டு தேனிக்கு சென்றனர். இரவு இவரது வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள், 235 பவுன் நகை, 48 லட்சம் ரூபாயை திருடி சென்றனர். சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை சேர்ந்த அருண் குமார். வேலுார் குடியாத்தம் பகுதி விக்னேஷ். ஈரோடு திண்டல் காரப்பாறையை சேர்ந்த சத்யன். ஆம்பூர் விண்ணமங்கலத்தை சேர்ந்த குமரன், கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் பாகலுார் சாலை மூவேந்தர் நகரை சேர்ந்த தியாகராஜன் மகன் வினு சக்கரவர்த்தி ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர்.

இவர்களிடம் இருந்து ஒரு கார், 76 லட்சம் ரூபாய், 132 பவுன் நகைகள் மீட்கப்பட்டது. முக்கிய குற்றவாளியான, கர்நாடகாவை சேர்ந்த நாராயண ரெட்டியை சூரம்பட்டி போலீசார் நெருங்கினர். அப்போது பெங்களூருவில் நடந்த திருட்டு வழக்கில், போலீசாரால் நாராயண ரெட்டி கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பது தெரியவந்தது. இந்நிலையில், அவரை பெங்களூரு சிறையில் இருந்து கஸ்டடி எடுத்து, இந்த திருட்டு வழக்கில் மேலும் தொடர்புடைய நபர்கள் குறித்தும், திருடப்பட்ட நகை, பணம் உள்ளிட்டவற்றை கைப்பற்றவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us