ADDED : ஆக 14, 2024 01:40 AM
அ நிறம் | அளவு
ஈரோடு: இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கம் சார்பில், நஞ்சை ஊத்துக்குளியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தேர்தல் வாக்கு-றுதியில் தெரிவித்தபடி பெட்ரோல், டீசல் கலால் வரியை தமிழக அரசு குறைக்க வேண்டும்.
ஓலா, ஊபர், ராபிடோ போன்ற பன்னாட்டு நிறுவனங்களை தடை செய்ய வேண்டும். ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும். போக்குவரத்து அபராதங்களை குறைக்க வேண்டும்.
ஆட்டோ கேஸ் விலையை குறைக்க வேண்டும் என்பன உள்-ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்-டனர். இந்து முன்னணி மாநகர மாவட்ட செயலாளர் கார்த்தி தலைமையில், 35 பேர் பங்கேற்றனர்.
