/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அரசு மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம்
/
அரசு மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : ஜூன் 06, 2024 04:14 AM
ஈரோடு: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.ஈரோடு அரசு மருத்துவமனை வளாகத்தில், மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் வெங்கடேஷ் தலைமை வகித்து, ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.
உறைவிட மருத்துவ அதிகாரி சசிரேகா முன்னிலை வகித்தார். செவிலியர் மாணவிகள், மருந்தியல் துறை மாணவ, மாணவிகள் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரங்கள், துணிப்பைகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அரசு மருத்துவமனையில் துவங்கிய ஊர்வலம், சவீதா பஸ் ஸ்டாப் வழியாக மீனாட்சிசுந்தரனார் சாலை வழியாக சென்று, ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நிறைவடைந்தது. செவிலியர் கண்காணிப்பாளர்கள் இந்திரா, சகிலா உட்பட பலர் பங்கேற்றனர்.* ஆசனுார் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட ஆசனுார் சூழல் மேம்பாட்டு சரகத்தில் அமைந்துள்ள கே.கே.தொட்டி பழங்குடியினர் கிராமத்தில் சூழல் மேம்பாட்டு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த கிராமத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.மாவட்ட வன அலுவலர் சுதாகர், ஆசனுார் சூழல் மேம்பாட்டு சரக வனச்சரகர் மணிகண்டன், சுடர் அமைப்பு இயக்குனர் நடராஜ் ஆகியோர் பேசினர். * உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, பர்கூர் அரசு பழங்குடியினர் நல மேல்நிலைப் பள்ளியில், நாட்டு நலப்பணித் திட்டம் சார்பாக, மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. முன்னதாக பள்ளி வளாகத்தில் நடந்த விழாவில் வேம்பு, புங்கை, தேக்கு உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது. பர்கூர் வனச்சரக அலுவலர்கள் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.