sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

காவிரியில் புனித நீராட தடை

/

காவிரியில் புனித நீராட தடை

காவிரியில் புனித நீராட தடை

காவிரியில் புனித நீராட தடை


ADDED : ஆக 02, 2024 02:06 AM

Google News

ADDED : ஆக 02, 2024 02:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில், அறநிலையத்துறை நேரடி கட்டுப்பாட்டில் உள்ள, காவிரி ஆற்றங்கரை அருகே உள்ள கோவில்களில், வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பக்தர்கள் இறங்கி குளிக்க தடை செய்யப்பட்டுள்ளது.

பவானி சங்கமேஸ்வரர் கோவில், கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் மற்றும் வீரநாராயண பெருமாள் கோவில், காங்கேயம்பாளையம் நட்டாற்றீஸ்வரர் கோவில், நஞ்சை காளமங்கலம் மத்தியபுரீஸ்வரர் கல்யாண வரதராஜ பெருமாள் கோவில், குலவிளக்கு அம்மன் கோவில், அம்மாபேட்டை சொக்கநாத சுவாமி கோவில், ஊஞ்சலுார் மாரியம்மன், செல்லாண்டியம்மன், பாசூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், நஞ்சை கிளாம்பாடி கைலாசநாதர் கோவில் உட்பட காவிரி கரையில் உள்ள சிறிய கோவில்களுக்கு வரும் பக்தர்கள், காவிரி ஆற்றில் இறங்கி புனித நீராட தடை செய்யப்பட்டுள்ளது. வரும், 3, 4 ஆகிய தேதிகளில் ஆடி-18, ஆடி அமாவாசை ஆகிய தினங்கள் மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கை உள்ள காலங்களில் இத்தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை, அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்ஜோதி தெரிவித்துள்ளார்.

உள்ளூர் விடுமுறை

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளை முன்னிட்டு வரும், 3ல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறை, வங்கிகளுக்கு பொருந்தாது. இத்தகவலை

கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us