sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

எருமப்பட்டி பஸ் ஸ்டாண்டிற்கு இரவில் செல்லாத பஸ்களால் அவதி

/

எருமப்பட்டி பஸ் ஸ்டாண்டிற்கு இரவில் செல்லாத பஸ்களால் அவதி

எருமப்பட்டி பஸ் ஸ்டாண்டிற்கு இரவில் செல்லாத பஸ்களால் அவதி

எருமப்பட்டி பஸ் ஸ்டாண்டிற்கு இரவில் செல்லாத பஸ்களால் அவதி


ADDED : மார் 29, 2024 05:08 AM

Google News

ADDED : மார் 29, 2024 05:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எருமப்பட்டி: இரவு நேரங்களில், எருமப்பட்டி பஸ் ஸ்டாண்டிற்கு பஸ்கள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எருமப்பட்டி டவுன் பஞ்சாயத்தில், 5,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் மக்கள், பொன்னேரி சாலையில் உள்ள பஸ் ஸ்டாண்டிற்கு சென்று தினமும் பஸ்சில் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இரவு நேரங்களில் துறையூர், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து செல்லும் பஸ்கள், எருமப்பட்டி நகருக்குள் செல்லாமல் நேரடியாக கைகாட்டி வழியாக செல்கின்றன. இதனால், இரவு நேரங்களில் வெளி மாவட்டங்களில் இருந்து எருமப்பட்டிக்கு பஸ்சில் பயணம் செய்யும் பயணிகள், கைகாட்டியில் இறங்கி, ஒரு கிலோ மீட்டர் துாரத்திற்கு இருட்டில் நடந்து செல்லும் நிலை உள்ளது.

இதனால், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளதாகவும், பொது மக்களின் நலன் கருதி இரவு நேரங்களில் வரும் அரசு மற்றும் தனியார் பஸ்களை, எருமப்பட்டி நகருக்குள் செல்ல வட்டார போக்குவரத்து அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us