/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சிறுமியை திருமணம் செய்தவர் மீது வழக்கு
/
சிறுமியை திருமணம் செய்தவர் மீது வழக்கு
ADDED : ஆக 05, 2024 06:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:ஈரோடு மாவட்டம் சித்தோட்டை சேர்ந்த தவசிமணி மகன் நேதாஜி, 19, கூலி தொழிலாளி. பவானியை சேர்ந்த, 17 வயது சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்து குடும்பம் நடத்தினார்.
தற்போது சிறுமி எட்டு மாத கர்ப்பிணியாக உள்ளார். மருத்துவ பரிசோதனைக்கு சிறுமி சென்றபோது இவ்விவகாரம் தெரியவந்தது. இதுகுறித்து சைல்டு ஹெல்ப் லைன் அலுவலர் அளித்த புகாரின்படி, பவானி அனைத்து மகளிர் போலீசார், குழந்தை திருமண தடை சட்டம் மற்றும் போக்சோ பிரிவில், நேதாஜி மீது வழக்குப்பதிவு செய்தனர்.