sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சென்னிமலை கொங்கு மெட்ரிக் 38வது ஆண்டாக 100 சத தேர்ச்சி

/

சென்னிமலை கொங்கு மெட்ரிக் 38வது ஆண்டாக 100 சத தேர்ச்சி

சென்னிமலை கொங்கு மெட்ரிக் 38வது ஆண்டாக 100 சத தேர்ச்சி

சென்னிமலை கொங்கு மெட்ரிக் 38வது ஆண்டாக 100 சத தேர்ச்சி


ADDED : மே 08, 2024 02:27 AM

Google News

ADDED : மே 08, 2024 02:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னிமலை:சென்னிமலை கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய, 161 மாணவ, மாணவியரும் தேர்ச்சி பெற்றனர்.

மாணவி தித்திகா, 587 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தார். மாணவி சியாமளா வள்ளி, 586 எடுத்து இரண்டாமிடம்; மாணவி சுதர்சனா, 585 எடுத்து மூன்றாமிடம் பெற்றனர். கடந்த, 38 ஆண்டுகளாக இப்பள்ளி, 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்து வருகிறது. பள்ளியில், 550 மதிப்பெண்களுக்கு மேல் நான்கு பேரும், 570 மதிப்பெண்களுக்கு மேல் ஐந்து பேரும், 560 மதிப்பெண்களுக்கு மேல் 15 பேரும், 550 மதிப்பெண்களுக்கு மேல் 21 பேரும், 500 மதிப்பெண்களுக்கு மேல் 61 பேரும் பெற்றுள்ளனர்.

கணினி அறிவியலில், 15 பேர் சென்டம்; கணினி பயன்பாட்டில் ஆறு பேர்; வணிகவியலில் ஐந்து பேர்; கணிதத்தில் மூன்று பேர்; புவியியல் பாடத்தில் மூன்று பேர்; கணக்கு பதிவியலில் இருவர்; வேதியியல் பாடத்தில் ஒருவரும் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்று சாதனை படைத்தனர்.

சாதனை படைத்த மாணவ, மாணவியர், இதற்கு காரணமான ஆசிரியர்களை, பள்ளி முதல்வர் முத்து கருப்பன், பள்ளி அறக்கட்டளை தலைவர் ரங்கசாமி, தாளாளர் மணி, பொருளாளர் தங்கமுத்து மற்றும் நிர்வாக குழுவினர், பரிசுக்கோப்பை வழங்கி பாராட்டி, வாழ்த்தினர்.






      Dinamalar
      Follow us