/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
திருட்டுப்போன கோவில் பொருட்கள் மீட்பு போலீசார் 'பைசல்' செய்ய முயல்வதாக புகார்
/
திருட்டுப்போன கோவில் பொருட்கள் மீட்பு போலீசார் 'பைசல்' செய்ய முயல்வதாக புகார்
திருட்டுப்போன கோவில் பொருட்கள் மீட்பு போலீசார் 'பைசல்' செய்ய முயல்வதாக புகார்
திருட்டுப்போன கோவில் பொருட்கள் மீட்பு போலீசார் 'பைசல்' செய்ய முயல்வதாக புகார்
ADDED : ஆக 11, 2024 03:04 AM
ஈரோடு: ஈரோடு கள்ளுக்கடை மேடு பத்ரகாளியம்மன் கோவிலில் இருந்து, பித்தளை தகடுகள், கோபுர கலசங்கள், விளக்குகள், பூஜை தட்டுகள், சொம்பு, குடம், மணி வகை திருட்டு போனது.
இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், சூரம்-பட்டி போலீசில் புகார் அளித்தனர். விசாரணையில் திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையத்தில் பழைய பொருட்கள் வாங்கும் கடையில் கோவிலுக்கு சொந்தமான பொருட்களை விற்-பனை செய்ததை கண்டுபிடித்தனர்.
போலீசார் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள், அந்த கடைக்கு சென்று, கோவிலுக்கு சொந்தமான பொருட்களை மீட்டு வந்தனர். இதனிடையே கோவில் பொருட்களை திருடி விற்பனை செய்த ஆசாமிகளுக்கு, ஆளும்கட்சி அரசியல் பிரமு-கரின் உறவினர் ஆதரவாக இருப்பதால், அவர்கள் கைது செய்-யப்படுவார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், திருட்-டுப்போன பொருட்கள் கிடைத்ததாக கூறி, போலீசாரும் பிரச்-னையை பைசல் செய்ய தீவிரம் காட்டுவதாக அறநிலையத்துறை-யினர் குற்றம் சாட்டியுள்ளனர்.