/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கூட்டுறவு துறை ஆணையர் உத்தரவுக்கு கோர்ட் தடை
/
கூட்டுறவு துறை ஆணையர் உத்தரவுக்கு கோர்ட் தடை
ADDED : மே 26, 2024 07:22 AM
திருப்பூர் : தமிழ்நாடு அரசு ரேஷன் கடை ஊழியர்கள் சங்க மாநில தலைவர் ராஜேந்திரன் கூறியதாவது:
ரேஷன் கடைகளில் இருப்பு குறையும் பொருட்களுக்கும், கூடுதலாக உள்ள பொருட்களுக்கும் அபராதம் விதிக்கும் நடைமுறை உள்ளது._ கடந்த மாதம், 29ம் தேதி, கூட்டுறவு துறை ஆணையர், இந்த அபராத தொகையை இரு மடங்கு உயர்த்தி அறிவித்தார். மாவட்ட இணைப்பதிவாளர்கள் வாயிலாக, கடந்த 5ம் தேதி இந்த உத்தரவு துணை பதிவாளர்கள் மூலம் கூட்டுறவு சங்கங்களுக்கு அளிக்கப்பட்டது._இந்த உத்தரவை தடை செய்ய வலியுறுத்தி, எங்கள் சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், இந்த உத்தரவுக்கு எட்டு வார காலம் தடை விதித்து இன்று (நேற்று) உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.