/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மத்திய பட்ஜெட்டை கண்டித்து காங்., சார்பில் ஆர்ப்பாட்டம்
/
மத்திய பட்ஜெட்டை கண்டித்து காங்., சார்பில் ஆர்ப்பாட்டம்
மத்திய பட்ஜெட்டை கண்டித்து காங்., சார்பில் ஆர்ப்பாட்டம்
மத்திய பட்ஜெட்டை கண்டித்து காங்., சார்பில் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 28, 2024 02:56 AM
ஈரோடு: மத்திய அரசின் பட்ஜெட்டில், தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ள-தாக கூறி, சூரம்பட்டி நால்ரோட்டில், மாநகர் மாவட்ட காங்., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட பொறுப்பாளர் திருச்-செல்வம் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட தலைவர் ரவி, மாவட்ட துணை தலைவர் ராஜேஷ் ராஜப்பா ஆகியோர் பேசினர். மத்திய பட்ஜெட்டில் ஆந்திரா மற்றும் பீகார் மாநிலத்துக்கு மட்டும் மிகவும் அதிகப்படியான நிதியை வழங்கிவிட்டு, தமி-ழகம் உட்பட தென் மாநிலங்களில் கேரளா, கர்நாடகா, தெலுங்-கானா போன்ற பல மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.
பல்வேறு வரிகள் மூலம் மத்திய அரசுக்கு அதிக அளவில் நிதிகள் வழங்கும் மாநிலமாக தமிழகம் உள்ள நிலையில், இங்கு பெறப்-படும் நிதியை பா.ஜ., கூட்டணி கட்சியினர் ஆளும் மாநிலங்க-ளுக்கு மட்டும் பகிர்ந்து வழங்கியது, தமிழகத்தை வஞ்சிக்கும் செயல் எனக்கூறி கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் விஜயபாஸ்கர், பாஷா, புனிதன், பாபு உட்பட பலர் பங்கேற்-றனர்.

