/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு கூட்டம்
/
மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு கூட்டம்
ADDED : ஜூலை 31, 2024 07:15 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த, அனைத்து துறை அலுவலர்களுடான ஆய்வு கூட்டம், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா முன்னிலையில் நடந்தது.
ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அலு-வலர் மற்றும் கூடுதல் ஆணையர் (வருவாய் நிர்-வாகம்) பிரகாஷ் தலைமை வகித்தார். மக்களை தேடி மருத்துவம், மகளிர் உரிமை திட்டம், நான் முதல்வன், முதல்வரின் காலை உணவு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள், அனைத்து துறை செயல்பாடு குறித்து ஆய்வு செய்யப்பட்-டது. திட்டங்களை முழுமையாக நிறைவேற்ற, அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வலியுறுத்தினார். மாநகராட்சி ஆணையர் மணீஷ், டி.ஆர்.ஓ., சாந்தகுமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) பிரே-மலதா, இணை இயக்குனர் (மருத்துவம்) அம்பிகா உட்பட பலர் பங்கேற்றனர்.