ADDED : ஜூலை 28, 2024 03:11 AM
சென்னிமலை: சென்னிமலை, குப்பிச்சிபாளையம் அருகே துண்டுகாட்டு தோட்-டத்தில் தங்கராசு என்பவருக்கு சொந்தமான தேங்காய் நார் மில் உள்ளது.
தேங்காய் நார் கழிவில் இருந்து வெளிநாடுகளில் விவசாயத்துக்கு பயன்படுத்தக்கூடிய தேங்காய் நார் பிரிக்ஸ் உற்பத்தி செய்து விற்-கிறார். இதற்காக தேங்காய் மட்டைகளில் இருந்து கயிறு உற்பத்-திற்கு நார் எடுத்த பிறகு கழிவுகளை, களத்தில் கொட்டி உலர்த்தி வருகிறார். பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தேங்காய் நார் கழிவு கொட்டப்பட்டிருந்த நிலையில், யாரோ வீசி எறிந்த அணைக்கப்-படாத சிகரெட் துண்டால், நேற்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. காற்றும் பலமாக வீசியதால் மளமளவென பரவியது.
சென்னிமலை தீயணைப்பு நிலைய அலுவலர் சதீஸ்குமார் தலை-மையிலான வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்-தனர். ஆனாலும், பல லட்சம் மதிப்புள்ள தேங்காய் நார் கழிவு கருகி சேதமடைந்து விட்டது.

