sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வனத்தில் யானை தாக்கி மீன் பிடி தொழிலாளி பலி

/

வனத்தில் யானை தாக்கி மீன் பிடி தொழிலாளி பலி

வனத்தில் யானை தாக்கி மீன் பிடி தொழிலாளி பலி

வனத்தில் யானை தாக்கி மீன் பிடி தொழிலாளி பலி


ADDED : ஜூலை 10, 2024 11:42 PM

Google News

ADDED : ஜூலை 10, 2024 11:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புன்செய்புளியம்பட்டி:ஈரோடு மாவட்டம், பவானிசாகர் வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசிக்கின்றன. பவானிசாகர் வனத்தையொட்டி சுஜ்ஜில்குட்டை, துாரா மொக்கை கிராமத்தில் வசிக்கும் மக்கள் விவசாய பணிகளோடு, மீன் பிடிக்கும் தொழிலிலும் செய்கின்றனர். துாரா மொக்கை பகுதியைச் சேர்ந்த மீன் பிடிக்கும் தொழிலாளி கனகராஜ், 44, என்பவர், நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியை ஒட்டியுள்ள, விவசாய நில குடிசையில் துாங்கிக் கொண்டிருந்தார்.

வனப்பகுதியில் இருந்து நள்ளிரவு நேரத்தில் வெளியேறிய ஒற்றை யானை, குடிசை வீட்டின் அருகே வந்தது. அதை பார்த்த கனகராஜ், கூச்சலிடுவதற்குள் யானை அவரை துரத்தி, தாக்கியதில் தலையில் பலத்த காயமடைந்தார்.

அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, ஒற்றை யானையை துரத்தி, படுகாயமடைந்த கனகராஜை மீட்டு, சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி, நேற்று காலை கனகராஜ் உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து விளாமுண்டி வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த இரு வாரங்களுக்கு முன், இதே பகுதியில் தர்பூசணி பயிருக்கு காவல் காத்திருந்த விவசாயியை, ஒற்றை யானை தாக்கி கொன்றது.






      Dinamalar
      Follow us