sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஈரோட்டில் பட்டப்பகலில் மூதாட்டி கொலை நாலரை பவுன் நகையை பறித்து சென்றனர்

/

ஈரோட்டில் பட்டப்பகலில் மூதாட்டி கொலை நாலரை பவுன் நகையை பறித்து சென்றனர்

ஈரோட்டில் பட்டப்பகலில் மூதாட்டி கொலை நாலரை பவுன் நகையை பறித்து சென்றனர்

ஈரோட்டில் பட்டப்பகலில் மூதாட்டி கொலை நாலரை பவுன் நகையை பறித்து சென்றனர்


ADDED : மே 19, 2024 03:07 AM

Google News

ADDED : மே 19, 2024 03:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோட்டில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை, கொலை செய்து, நாலரை பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

ஈரோடு, சின்ன செட்டிபாளையம், ஸ்டேட் பாங்க் நகரை சேர்ந்தவர் கோபிநாத். ஓய்வு பெற்ற ரயில்வே தொழிலாளி. ஓராண்டுக்கு முன் இறந்து விட்டார். இவர் மனைவி ராதா, 80; கடந்த, 40 ஆண்டாக இரண்டாவது கணவராக கோபிநாத்துடன் வசித்தார். கோபிநாத்துக்கு குழந்தைகள் இல்லை. அதேசமயம் ராதாவின் முதல் கணவர் கந்தன். விவசாய கூலியான இவர் இறந்து விட்டார். இவருக்கு பழனியம்மாள், செல்வி என்ற இரு மகள், கணேசன் என்ற மகன் உள்ளனர். கடந்த சில மாதங்களாக மகள்கள், மகன் ஆகியோர் ராதாவை, முறை வைத்து பராமரித்து வந்தனர்.

கடந்த, ௧௨ம் தேதி முதல் மகன் பராமரிப்பில் ராதா இருந்தார். நேற்று காலை மகள் பழனியம்மாளுக்கு போன் செய்த ராதா, வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். நேற்று மாலை, 4:30 மணிக்கு அவர் சென்றார். அப்போது நாற்காலியில் அமர்ந்த நிலையில் ராதா இறந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி பழனியம்மாள் அளித்த புகாரின்படி, எஸ்.பி., ஜவகர், டி.எஸ்.பி., ஜெய்சிங் மற்றும் தாலுகா போலீசார் சென்று விசாரணை நடத்தினர். மோப்ப நாய் சோதனையும் நடந்தது. கைரேகை நிபுணர்களும் ரேகைகளை பதிவு செய்தனர்.

சந்தேக மரணம் என தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உடற்கூறு பரிசோதனைக்காக பெருந்துறை மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு, உடலை அனுப்பி வைத்தனர்.

தலையணையால் அழுத்தி கொலை செய்த ஆசாமிகள், கழுத்து மற்றும் கைகளில் ராதா அணிந்திருந்த தங்க நகை, மோதிரம் என நாலரை பவுன் நகையை பறித்து சென்றுள்ளனர். மூதாட்டியை கொன்று நகை பறித்த சம்பவம், ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us