sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வெயிலால் மாட்டுச்சந்தைக்கு கால்நடை வரத்து சரிவு

/

வெயிலால் மாட்டுச்சந்தைக்கு கால்நடை வரத்து சரிவு

வெயிலால் மாட்டுச்சந்தைக்கு கால்நடை வரத்து சரிவு

வெயிலால் மாட்டுச்சந்தைக்கு கால்நடை வரத்து சரிவு


ADDED : மே 03, 2024 02:47 AM

Google News

ADDED : மே 03, 2024 02:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:ஈரோடு அருகே கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தை நேற்று நடந்தது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 5000 ரூபாய் முதல் 25,000 ரூபாய் மதிப்பில் 50 கன்றுகளும், 25,000 ரூபாய் முதல் 65,000 ரூபாய் மதிப்பில் 300 எருமை மாடுகள், 25,000 ரூபாய் முதல் 85,000 ரூபாய் மதிப்பில் 320 பசு மாடுகள், 75,000 ரூபாய்க்கு மேலான விலையில் 50 கலப்பின மாடுகளும் வரத்தாகின.

தமிழகத்தில் தேர்தல் முடிந்தாலும் கடும் வெயிலால் கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாடு நிலவுகிறது.

அதேசமயம் தண்ணீர் பற்றாக்குறையால் தமிழக விவசாயிகள் வியாபாரிகள் குறைவாகவே மாடுகளை வாங்கினர். வரத்தான கால்நடைகளில் 80 சதவீதம் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

* புன்செய்புளியம்பட்டியில் நடந்த கால்நடை சந்தைக்கும் கடும் வெப்பத்தால் கால்நடைகளின் வரத்து வெகுவாக சரிந்தது.

அதேசமயம் விலையும் வெகுவாக குறைந்தது. 30 ஆயிரம் ரூபாய்க்கு விற்க வேண்டிய மாடு, 20 ஆயிரம் ரூபாய்; 15 ஆயிரம் மதிப்பிலான வளர்ப்பு கன்று, 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது. கால்நடைகளின் விலை குறைந்ததால் ஒரு சில விவசாயிகள் மாடுகளை விற்காமல் திரும்ப கொண்டு சென்றனர்.






      Dinamalar
      Follow us