sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

235 பவுன் நகை திருட்டில் குற்றவாளியை பிடிக்க போலீசார் கர்நாடகா விரைவு

/

235 பவுன் நகை திருட்டில் குற்றவாளியை பிடிக்க போலீசார் கர்நாடகா விரைவு

235 பவுன் நகை திருட்டில் குற்றவாளியை பிடிக்க போலீசார் கர்நாடகா விரைவு

235 பவுன் நகை திருட்டில் குற்றவாளியை பிடிக்க போலீசார் கர்நாடகா விரைவு


ADDED : ஜூன் 13, 2024 07:22 AM

Google News

ADDED : ஜூன் 13, 2024 07:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு : ஈரோடு ஆடிட்டர் வீட்டில் நடந்த, 235 பவுன் நகை திருட்டில் குற்றவாளியை பிடிக்க போலீசார் கர்நாடகா சென்றுள்ளனர்.

ஈரோடு, சூரம்பட்டி என்.ஜி.ஜி.ஓ.,காலனி 7வது வீதியை சேர்ந்தவர் சுப்பிரமணி, 69, ஆடிட்டர். கடந்த, 8 காலை மனைவி சாதானாவுடன் தேனிக்கு சென்றார். மறுநாள் காலை அவரது வீட்டில், 235 பவுன் நகை, 48 லட்சம் ரூபாய் திருட்டு போனது தெரியவந்தது. சூரம்பட்டி போலீசார் 'சிசிடிவி' கேமரா பதிவை ஆய்வு செய்தபோது, ஒருவர் மட்டும் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. திருட்டில் ஈடுபட்ட நபரை தேடி, சூரம்பட்டி இன்ஸ்பெக்டர் வைரம் தலைமையில் போலீசார் கர்நாடகா மாநிலம் சென்றுள்ளனர்.

இது குறித்து போலீசார் கூறியதாவது: கர்நாடகா மாநில பதிவெண் கொண்ட காரில் மர்ம நபர் கடந்த, 8 காலை திருட்டு நடந்த பகுதிக்கு வந்து நோட்டமிட்டுள்ளார். நள்ளிரவு, 12:40 மணிக்கு ஆடிட்டர் வீட்டுக்குள் சென்று, அதிகாலை 4:50 மணி வரை இருந்துள்ளார். அதன் பின் வீட்டின் பின்புறம் வழியே வெளியே சென்றுள்ளார். ஈரோட்டை விட்டு அதிகாலையே வெளியேறியவர், முகத்தை அடையாளம் காணாமல் இருக்க காரில் இருந்து கீழே இறங்கவில்லை. கர்நாடகா மாநில எல்லையில் உள்ள டோல்கேட்டில் காரை நிறுத்தி கன்னடத்தில் அவர் உரையாடியுள்ளார்.

அவரது கார் பதிவெண்ணை அடிப்படையாக வைத்து, இன்ஸ்சூரன்ஸ் கம்பெனியை கண்டு

பிடித்து அவரது முகவரி, மொபைல் போன் எண்ணை கண்டறிந்துள்ளனர். அவரது மொபைல் போன் எண்ணை கண்காணிக்கும் போலீசார், மொபைல் போன் டவர் திசையை கண்டுபிடிக்க தீவிரமாக முயற்சித்து வருகின்றனர். திருட்டில் ஈடுபட்டது பழங்குற்றவாளி. பதட்டமில்லாமல் திருட்டில் ஈடுபட்டுள்ளார். ஆடிட்டர் வெளியூர் செல்வது தெரிந்தே திருட்டை அரங்கேற்றி உள்ளார். ஆடிட்டருக்கு நெருக்கமானவர்கள் மூலம் தகவல் அறிந்து, மர்ம நபர் திருட வந்திருக்கலாம். இவ்வாறு கூறினர்.

இதற்கிடையில் நேற்று காலை ஆடிட்டர், அவரது மனைவி மற்றும் அவரது வீட்டில் வேலை செய்யும் பணியாளர்கள், ஈரோடு எஸ்.பி.,அலுவலகம் வந்து, தங்கள் கைரேகைகளை பதிவு செய்தனர்.






      Dinamalar
      Follow us