/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கேரளா எக்ஸ்பிரஸ் திருப்பதி செல்லாது
/
கேரளா எக்ஸ்பிரஸ் திருப்பதி செல்லாது
ADDED : மே 26, 2024 07:23 AM
திருப்பூர் : 'புதுடில்லியில் இருந்து திருவனந்தபுரத்துக்கு இயக்கப்படும் கேரளா எக்ஸ்பிரஸ் வரும், 28ம் தேதி, திருப்பதி செல்லாது,' என, அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் காட்பாடி - ஆந்திர மாநிலம் சித்துார் வழித்தடத்தில், பொம்மசமுத்திரம் ரயில்வே ஸ்டேஷன் அருகே புதிய மின் இணைப்பு, பொறியியல் மேம்பாட்டு பணி நடக்கிறது.
இதனால், புதுடில்லியில் இருந்து திருவனந்தபுரம் வரும் கேரளா எக்ஸ்பிரஸ் (எண்:12626) வழித்தடம் மாற்றப்பட்டுள்ளது. இந்த ரயில் வரும் 28ம் தேதி குடூரில் இருந்து ரேணிகுண்டா, மேல்பாக்கம் வழியாக காட்பாடி வந்தடையும். திருப்பதி மற்றும் சித்துார் ஸ்டேஷன் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கோவையில் இருந்து திருப்பதிக்கு இயக்கப்படும் ரயில் இம்மாதம், 28, 30 ம் தேதிகளில் காட்பாடி வரை மட்டும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது, குறிப்பிடத்தக்கது.