sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

காரை அகற்றாமல் சாலை அமைத்த லட்சணம் அரைகுறை பணிக்கு அட்டகாச உதாரணம்

/

காரை அகற்றாமல் சாலை அமைத்த லட்சணம் அரைகுறை பணிக்கு அட்டகாச உதாரணம்

காரை அகற்றாமல் சாலை அமைத்த லட்சணம் அரைகுறை பணிக்கு அட்டகாச உதாரணம்

காரை அகற்றாமல் சாலை அமைத்த லட்சணம் அரைகுறை பணிக்கு அட்டகாச உதாரணம்


ADDED : ஜூலை 30, 2024 03:29 AM

Google News

ADDED : ஜூலை 30, 2024 03:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதன்படி, 24வது வார்டுக்கு உட்பட்ட கிருஷணம்பாளையம் ஜீவா நகரில், 26ம் தேதி சாலை அமைக்கும் பணி நடந்தது. அப்பகுதியில் கார் ஒன்று நிறுத்தப்-பட்டிருந்தது. சாலை அமைக்கும் பணிக்காக வந்த ஊழியர்கள், காரின் உரிமையாளரை தேடினர். அவர் கிடைக்காததால், வேறு வழியின்றி காரை அகற்றாமல் சாலை அமைத்து சென்றனர். இதனால் அப்பகுதி மக்கள் ஆச்சரியம் அடைந்தனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: சாலை அமைக்கும் பணி தொடர்பாக, முன்கூட்டியே தகவல் தெரிவித்திருந்தால், அந்த காரை அகற்றியிருக்கலாம். ஆனால், இரவில் சாலை அமைக்க வந்தனர். உரிமையாளர் தெரியாததால், காரை அகற்-றாமல் சாலை அமைத்து சென்றுள்ளனர். மாநகராட்சியில் பல பணிகள் இந்த லட்சணத்தில்தான் நடக்கிறது. அரசு நிர்வாகத்தை எப்படித்தான் பாராட்டுவதோ! தெரியவில்லை. இவ்வாறு மக்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us