ADDED : செப் 15, 2024 02:31 AM
*ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் நேற்று நடந்த ஏலத்தில் மல்லிகை பூ ஒரு கிலோ, 1,480 ரூபாய்க்கு ஏலம் போனது. முல்லை-635, காக்கடா-450, செண்டுமல்லி-72, கோழிகொண்டை-90, ஜாதிமுல்லை-500, கனகாம்பரம்-850, சம்பங்கி-160, அரளி-70, துளசி-50, செவ்வந்தி-120 ரூபாய்க்கும் விற்பனையானது.
* கோபி அருகே மொடச்சூரில், பருப்பு மற்றும் பயிர் ரகங்கள் விற்பனைக்கான வாரச்சந்தை நேற்று கூடியது. துவரம் பருப்பு (கிலோ), 170 ரூபாய், குண்டு உளுந்து, 140 ரூபாய், பச்சை பயிர், 120, பாசிப்பருப்பு, 130, மல்லி மற்றும் கடுகு, தலா 120 ரூபாய், சீரகம், 450, வெந்தயம், 120, வரமிளகாய், 200, பூண்டு, 400, பொட்டுக்கடலை, 130, கருப்பு சுண்டல், 100, வெள்ளை சுண்டல், 150 ரூபாய் என விற்பனையானது. கோவில் விசேஷம். பண்டிகை இல்லாததால், இந்த வாரம் பருப்பு மற்றும் பயிர் ரகங்களின் வியாபாரம் மந்தமாக இருந்ததாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.
* சித்தோடு வெல்லம் சொசைட்டியில் நேற்று, 30 கிலோ எடை கொண்ட, 3,100 நாட்டு சர்க்கரை மூட்டை வரத்தானது. ஒரு மூட்டை நாட்டு சர்க்கரை, 1,250 ரூபாய் முதல், 1,370 ரூபாய் வரையிலான விலையில் விற்பனையானது. உருண்டை வெல்லம், 3,800 மூட்டைகள் வரத்தாகி ஒரு மூட்டை, 1,300 ரூபாய் முதல், 1,380 ரூபாய் வரையிலான விலையில் விற்பனையானது. அச்சு வெல்லம், 200 மூட்டை வரத்தாகி ஒரு மூட்டை, 1,400 ரூபாய் முதல், 1,460 ரூபாய் என்ற விலையில் விற்பனையானது. கடந்த வாரத்தைவிட நாட்டு சர்க்கரை, வெல்லம் வரத்து குறைந்தது. அதேநேரம் அச்சு வெல்லம் மூட்டைக்கு, 30 ரூபாய் அதிகரித்து. நாட்டு சர்க்கரை மற்றும் உருண்டை வெல்லம் மூட்டைக்கு, 30 ரூபாய் விலை குறைந்தது.
* ஆவணி மாத கடைசி முகூர்த்தத்தால், கடந்த இரண்டு நாட்களாக புன்செய்புளியம்பட்டி பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்தது. நேற்று மல்லிகை பூ கிலோ, 1,480 ரூபாய், முல்லை கிலோ, 635 ரூபாய், சம்பங்கி, 160 ரூபாய்க்கும் விற்றது.
* சிவகிரி ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு, 257 மூட்டைகளில் எள்ளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். கருப்பு ரகம் கிலோ, 115.09 ரூபாய் முதல், 157.99 ரூபாய்; சிவப்பு ரகம், 90.59 ரூபாய் முதல், 156.42 ரூபாய் வரை, 19,187 கிலோ எள், 26 லட்சத்து, 89,205 ரூபாய்க்கு விற்பனையானது.
* அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்துக்கு, 14,183 தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்தனர். ஒரு கிலோ, 32.19 ரூபாய் முதல், 40.01 ரூபாய் வரை, 2.௧௮ லட்சம் ரூபாய்க்கு விற்றது.
* திருப்பூர் மாவட்டம் முத்துார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த தேங்காய் பருப்பு ஏலத்துக்கு, 2,230 கிலோ வரத்தானது. ஒரு கிலோ அதிகபட்சம், 111.05 ரூபாய், குறைந்தபட்சம், 84 ரூபாய்க்கும் ஏலம் போனது. மொத்தம், 2.௨௪ லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.