ADDED : ஆக 06, 2024 08:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு யூனியனில் உள்ள ஆறு பஞ்சாயத்துக்க-ளையும், மாநகராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிடக்கோரி, யூனியன் அலுவலகம் முன், மா.கம்யூ., கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் செய்தனர். தாலுகா செயலாளர் பாலசுப்பிரமணி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ரகு-ராமன் முன்னிலை வகித்தார்.
பஞ்சாயத்துக்களை மாநகராட்சியுடன் இணைத்தால், தற்போது செயல்படுத்தப்படும் நுாறு நாள் வேலை திட்டப்பணி முற்றிலும் நிறுத்தப்படும். எனவே இந்த பஞ்சாயத்துக்களை மாநகராட்சியுடன் இணைக்க கூடாது என வலியு-றுத்தி போராட்டம் செய்து, யூனியன் அலுவல-கத்தில் மனு வழங்கினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பழனிசாமி, கோரதி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் விஜயரா-கவன் உட்பட பலர் பேசினர்