/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கோபியில் வீடுகளின் மீது கற்களை வீசியவர் கைது
/
கோபியில் வீடுகளின் மீது கற்களை வீசியவர் கைது
ADDED : ஆக 05, 2024 01:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி, கோபி அருகே அக்கரை கொடிவேரி பகுதியில், ஒரு வாரமாக நள்ளிரவில் வீடுகள் மீது கற்கள் வீசும் சம்பவம் நடந்தது.
இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, 10:30 மணிக்கு, பிரேமா என்பவர் வீட்டின் மீது கற்கள் வீசப்பட்டன. இதுகுறித்து பிரேமா கொடுத்த புகாரின்படி, அதே பகுதியை சேர்ந்த நிர்மல்ராஜ், 38, என்பவரை கடத்துார் போலீசார் நேற்று கைது செய்தனர்.