ADDED : ஜூலை 01, 2024 03:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மாநகராட்சியில் நான்கு மண்டலங்களிலும், நீண்ட காலமாக துார்வாரப்படாத கழிவுநீர் ஓடை, குப்பையை வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஒட்டு மொத்தமாக சுத்தம் செய்யும், 'மாஸ் கிளினீங்' முறையை, மீண்டும் மாநகராட்சி நிர்வாகம் கையில் எடுத்துள்ளது. இதன்படி மூன்றாவது வார்டு
பகுதிகளில், மாஸ் கிளினீங் நேற்று நடந்தது. ஜவுளி நகர், சி.எம்.நகர், மாதேஸ்வரன் நகர், இந்திரா புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், 25க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் இதில் ஈடுபட்டனர்.