/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பண்ணாரி அம்மன் கோவிலில் எம்.எல்.ஏ., பண்ணாரிக்கு அதிர்ச்சி
/
பண்ணாரி அம்மன் கோவிலில் எம்.எல்.ஏ., பண்ணாரிக்கு அதிர்ச்சி
பண்ணாரி அம்மன் கோவிலில் எம்.எல்.ஏ., பண்ணாரிக்கு அதிர்ச்சி
பண்ணாரி அம்மன் கோவிலில் எம்.எல்.ஏ., பண்ணாரிக்கு அதிர்ச்சி
ADDED : மார் 27, 2024 03:49 PM
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகேயுள்ள, பண்ணாரி மாரியம்மன் கோவிலில், குண்டம் விழா நேற்று நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில் பங்கேற்க பவானிசாகர் தொகுதி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., பண்ணாரி குடும்பத்தினருடன் கோவிலுக்கு நள்ளிரவு, 1:30 மணிக்கு வந்தார்.
கோவில் நுழைவுவாயிலில் இருந்த போலீசார், அவரை உள்ளே அனுமதிக்கவில்லை. அடையாள அட்டையை காண்பித்தும் அனுமதி மறுக்கவே, போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஒரு மணி நேரம் காத்திருந்த நிலையில், கோவில் செயல் அலுவலரை மொபைல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அதன் பிறகே போலீசார், எம்.எல்.ஏ.,வை கோவிலுக்குள் அனுமதித்தனர். இதனால் எம்.எல்.ஏ., கடும் அதிருப்தி அடைந்தார்.
தேங்காய், கொப்பரை, எள் ரூ. 51.84 லட்சத்துக்கு ஏலம்
கொடுமுடி: கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் எள், தேங்காய் மற்றும் கொப்பரை தேங்காய் ஏலம் நேற்று நடந்தது.
தேங்காய் ஏலத்துக்கு, 2,750 காய்கள் வரத்தாகின. ஒரு கிலோ, 24.05 ரூபாய் முதல், 28.39 ரூபாய் வரை விலை போனது. கொப்பரை தேங்காய், 680 மூட்டை வந்தது.
முதல் தரம் கிலோ, 8௯ ரூபாய் முதல், ௯௧ ரூபாய்; இரண்டாம் தரம் கிலோ, 64.39 ரூபாய் முதல் 88.47 ரூபாய் வரை விலை போனது.எள் ஏலத்துக்கு, 233 மூட்டைகள் வரத்தாகின. கறுப்பு எள் கிலோ, 122.59 ரூபாய் முதல் 138.80 ரூபாய்; சிவப்பு எள் கிலோ, 112.69 ரூபாய் முதல் 141.79 ரூபாய் வரை விலை போனது.
தேங்காய், கொப்பரை மற்றும் எள் என அனைத்தும், 51.84 லட்சம் ரூபாய்க்கு
விற்றது.
ரேஷன் அரிசி பறிமுதல்
தாராபுரம்: தாராபுரம், பழநி ரோடு கொங்கூர் பிரிவு அருகே, தேர்தல் பறக்கும் படையினர், நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். பழநியை சேர்ந்த நுாருதீன், மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த ஜைனுல் ஹாஜி வந்த பிக்-அப் வாகனத்தில், 500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. அரிசியை பறிமுதல் செய்து வருவாய் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

