sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பொறுப்பு மையத்துக்கு மாதம் ரூ.2,000 கேட்கும் சத்துணவு ஊழியர்

/

பொறுப்பு மையத்துக்கு மாதம் ரூ.2,000 கேட்கும் சத்துணவு ஊழியர்

பொறுப்பு மையத்துக்கு மாதம் ரூ.2,000 கேட்கும் சத்துணவு ஊழியர்

பொறுப்பு மையத்துக்கு மாதம் ரூ.2,000 கேட்கும் சத்துணவு ஊழியர்


ADDED : செப் 01, 2024 03:52 AM

Google News

ADDED : செப் 01, 2024 03:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் ஈரோடு ஒன்றிய, மாநகராட்சி அமைப்பு சார்பில் கிளை மாநாடு ஈரோட்டில் நடந்தது.

மாவட்ட தலைவர் தனுஷ்கோடி தலைமை வகித்தார். ஒன்றிய பொறுப்பாளர்கள் விஜயா, சித்ரா, மாநகராட்சி பொறுப்பாளர்கள் பவுர்ணா, விஜயா முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு மாநில அனைத்து மாநகராட்சி அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் ராதாகிருஷ்ணன் பேசினார்.சத்துணவு திட்டத்தில் காலியாக உள்ள, 50,000 பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஓய்வூதியத்துடன் அகவிலைப்படி சேர்த்து வழங்க வேண்டும். மாதாந்திர சில்லரை செலவீனம், 250 ரூபாயாக உயர்த்த வேண்டும். 10 ஆண்டு பணி நிறைவு செய்த அமைப்பாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்.

கூடுதல் மைய பொறுப்புக்கு, ஒரு மையத்துக்கு மாதம், 2,000 ரூபாய் வழங்க வேண்டும். காஸ் அடுப்பு பழுதானால், அதை சரி செய்யும் செலவினம் அதே மாதம் வழங்க வேண்டும். 2 ஆண்டுக்கு ஒரு முறை புதிய காஸ் அடுப்பு வழங்க வேண்டும். சமையலர், உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர்.






      Dinamalar
      Follow us