sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பனை விதைகள் சேகரிக்கும் பணியில் அதிகாரிகள் தீவிரம்

/

பனை விதைகள் சேகரிக்கும் பணியில் அதிகாரிகள் தீவிரம்

பனை விதைகள் சேகரிக்கும் பணியில் அதிகாரிகள் தீவிரம்

பனை விதைகள் சேகரிக்கும் பணியில் அதிகாரிகள் தீவிரம்


ADDED : செப் 08, 2024 01:02 AM

Google News

ADDED : செப் 08, 2024 01:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனை விதைகள் சேகரிக்கும்

பணியில் அதிகாரிகள் தீவிரம்

ஈரோடு, செப். 8-

தமிழகத்தில் காவிரி கரையோர பகுதிகளில், 1 கோடி பனை விதை நடும் பணியானது, ராமேஸ்வரத்தில் ஜூலை மாதம் தொடங்கி வைக்கப்பட்டது.

இதை தொடர்ந்து ஒகேனக்கல் முதல் பூம்புகார் வரை ஈரோடு உள்பட எட்டு மாவட்டங்களில் காவிரி கரையோரத்தின் இருபக்கங்களிலும், 416 கி.மீ., துாரத்துக்கு பனை மரம் நடும் பணி தொடங்கவுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் இந்த பணியானது, வரும், 14ம் தேதி தொடங்குகிறது. ஒரு வாரமே உள்ளதால் பனை விதைகளை சேகரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர்கள் ஒவ்வொரு வருவாய் வட்டத்திலும் இதற்கான பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல் வேளாண், தோட்டக்கலை துறை அதிகாரிகளும், விவசாயிகளை அணுகி பனை விதை சேகரித்து வருகின்றனர். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பள்ளி, கல்லுாரி மற்றும் தன்னார்வ அமைப்புகள் மூலம் பனை விதைகளை சேகரிக்கும் பணி மேற்கொண்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us