ADDED : மே 07, 2024 02:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர்:ஆப்பக்கூடல் அருகே கள்ளியூரை சேர்ந்தவர் பொம்மநாயக்கர், 80.
நேற்று முன்தினம் டிவிஎஸ்.எக்ஸல் மொபட்டில், அத்தாணி -பவானி சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ரொனால்டு கார், மொபட் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் இரவு இறந்தார். ஆப்பக்கூடல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.